ரவி மதுரை செல்ல குருவாயூர் இரயிலில் முன் பதிவு செய்திருந்தான், ஆனால் வழக்கம்  போல வீட்டில் இருந்து லேட்டா கிளம்பினான்.   கிண்டி அருகில் சென்னை டிராப்பிக்கில் மாட்டினான், ஆனால் சந்து பொந்துகளில் வண்டி ஓட்டி ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட  சென்னை வாசி போல சுலபமாக தப்பித்து தாம்பரம் வந்து அடைந்தான்.  வேகமாக  சென்று வண்டியை பார்க்கிங் செய்யும் இடத்தை அடைந்தான். கஷ்டப்பட்டு ஒரு நிழலில் வண்டியை பார்க் செய்தான். டோக்கன் வாங்க சென்ற போது, அந்த உரிமையாளர் எல்லோரிடமும் சில்லறை கேட்டு கத்தி கொண்டு இருந்தார்.   அதனால் ரவி தன் பையில் இருந்த சில சில்லறை ரூபாய் கொடுத்து வேகமாக வண்டி டோக்கன் வாங்கி’ வெளியில் வந்து  ரயில்லை பிடிக்க ஓடினான்.  இந்த குருவாயூர் இரயிலுக்கு ஒரு விசேசம் உண்டு, அது என்னன்னா ரயில் சரியான நேரத்திற்கு தான் கிளம்பும்; ஆனால் சரியான நேரத்திற்கு சேரும் இடத்திற்கு செல்லாது.

எப்படியோ கூட்டதில் புகுந்து பிளாட்பாரத்தை அடைந்தான்,  இவன் புக் செய்து வைத்திருந்த செகண்ட் கிளாஸ் ஏ/சி வகுப்பில் ஏறி பெட்டியை மேல வைத்து விட்டு தான் பார்த்தான் அந்த பெண்ணை, பார்த்ததும் மெய் மறந்து போனான். அந்த பெண் அவ்வளவு அழகு, தேவதை போல இருந்தாள்.  இதுவரை எத்தனையோ ரயில் பயணங்களில் இது போல எந்த ஒரு பெண்ணையும் பார்த்ததில்லை. உடனே அவன் அந்த பெண்ணிடம் ஒன்று  சொல்ல நினைத்தான்.  சரி உடனே சொன்னா அந்த பொண்ணு தப்பா நினைக்கும் என்று நினைத்து பிறகு சொல்லலாம் என்று முடிவு செய்தான்.

முதலில் அந்த பெண்ணிடம் நல்லா பழகுவோம் என்று நினைத்து பேச முடிவு செய்தான். முதலில் என் பெயர் ரவி, நான் மதுரை போகிறேன் என்று அந்த பெண்ணிடம் சொன்னான், அதற்கு அவளும் நானும் மதுரை தான் போகிறேன் என்று சொன்னாள்.  இருவரும் பல விசயங்கள் பேசிக்கொண்டு வரும் போது ரயில் செங்கல்பட்டு வந்து அடைந்தது.

இவர்கள் வகுப்பில் மேலும் சில பேர் ஏறினர். அதனால் அவன் சொல்ல வந்ததை சொல்லாமல் விட்டு விட்டான்.  அடுத்து ரயில் விழுப்புரத்தை அடைந்தது, இவன் கிழே இறங்கிசென்று இரண்டு உளுந்தவடை வாங்கி வந்து அவளிடம் கொடுத்து பல வடைகளை  அவனை பற்றி சுட்டான், ஆனால் அவள் அதை பற்றி எல்லாம் கவனிக்காமல் அவனிடம் வடை சூடா இல்லை என்று கூறிவிட்டு அமைதியாக வடையை சாப்பிட்டாள்.

வண்டி திருச்சியை நோக்கி வேகமாக சென்றது, பகல் வெயிலும் அதிகமாக இருந்தது. ஏ/சி கோச் ஆனதால் உள்ளே வெயில் தெரியவில்லை, ஆனாலும் வாயில் உள்ள வார்த்தைகளை சொல்ல முடியாமல் இவனுக்கு வேர்த்தது. உடனே எழுந்து ரயிலில் உள்ள பாத்ரூம் சென்று கதவை மூடினான்.  ரயில் கதவில் உள்ள வார்த்தைகளையும், படங்களையும் பார்த்தவுடன் வந்த வார்த்தையும் வராமல் உள்ளே சென்றது. இறுதியாக பாத்ரூமில் இருந்த கண்ணாடியை பார்த்து பல முறை பேசி பார்த்து தைரியமாக வெளியே வந்தான்.

வெளியே வந்து அந்த பெண்ணிடம் உங்களை ————— என்று சொல்லும் போது ரயில் வண்டி திருச்சியை வந்து அடைந்தது.  அருகில் இருந்த எல்லோரும் இறங்க வேண்டி அவசரமாக எழுந்தனர். அதனால் இவனால் சொல்ல வந்ததை சொல்ல முடியவில்லை.

உடனே அந்த பெண் அவனிடம் சாப்பிட எதாவது வாங்கி வர சொன்னாள். இவனும் அந்த பெண் சொன்னதை கேட்டு ஓடினான் வேகமாக, இறுதியாக சாப்பிட தயிர் சாதம் வாங்கி வந்தான்,  அவள் தயிர் சாதத்தை பார்த்தவுடன் ஆசையாக வாங்கி சாப்பிட்டாள். சாப்பிட்டு முடித்தவுடன் ரொம்ப நன்றி என்று கூ றினாள்.

அதை கேட்ட உடன் இது தான் சரியான தருணம் என்றும், தயங்காமல் சொல்லிவிடலாம் என்றும் நினைத்தான்,  ஆனால் இதுவரை வராத டிக்கெட் பரிசோதகர் அப்போது தான் இவர்கள் வகுப்பில் வந்து இவர்களிடம் டிக்கெட் கேட்டார். அப்போதும் அவன் சொல்ல வந்தது தடைபட்டது.  ரயில் பரிசோதகர் சோதனை முடித்து விட்டு சொல்லும் போது மதுரையும் வந்தது,

இவன் சொல்லி முடிக்கும் முன்பே மதுரை வந்தது, அது தான் இருவரும் இறங்கும் இடம்…

கதையை வாசித்த வாசகர்களே இந்த கதையின் முடிவு என்ன?????

ரவி என்ன சொல்ல நினைத்தான்?

உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும்…………………………………….

ரவி சொல்ல வந்தது அடுத்த கதையின் முடிவில் …………………

Share This Book