ராம் ஒரு வெளிநாட்டு கம்பெனியில் வேலை செய்கிறான்; அடிக்கடி வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வான், அவனுக்கு குடும்பமோ  குட்டியோ கிடையாது.  சால்ட் அண்ட் பெப்பர் போல முடி எல்லாம் நரைத்து வயது 40 எட்டியுள்ளது.

சீதா அவன் அலுவலகத்தில் அவனுக்கு  கீழ் வேலை செய்யும் ஒரு பெண்.  இப்ப இருவரும் ஓர் ப்ராஜெட் விசயமாக சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் அருகருகே அமர்ந்து பயணம் செய்கின்றனர். சீதா மடிகணினியை எடுத்து மறுநாள் சிங்கப்பூர் வேலைக்கு செய்ய வேண்டியதை செய்து கொண்டு இருந்தால், ராம் ஒரு பெக் வோட்காவை போட்டு விட்டு கண் அசந்து உறங்கினான்.  சிங்கப்பூர் வந்த உடன் தான் எழுந்தான், இருவரும் ஒரு டாக்ஸி பிடித்து அவர்கள் தங்கும் ஹோட்டல் சென்றனர்.

மறுநாள் மீட்டிங்கில் சீதா தயார் செய்து வைத்திருந்த பதிவுகளை இவனது மடிகணினியில் ஏற்றிக்கொண்டு அருமையாக விளக்கினான்; அனைவரையும் அவனது வசீகர பேச்சால் கட்டி போட்டன்.  முடிவில் அவர்களும் அவனது கம்பனிக்கு சம்மதம் தெரிவித்து உடனடியாக ஒரு ஒப்பந்தமும் தயார் செய்தனர்.  அதை வாங்கி கொண்டு, உடனடியாக அவன் உயர் அதிகாரிக்கு தெரிவித்தான், அவர்கள் இவனை பாராட்டியதோடு மட்டுமில்லாமல் மேலும் சில நாள் இருந்து சின்ன ஒப்பந்தங்களை முடிக்க சொன்னார். அவனும் அதற்கு சரி என சம்மதித்துவிட்டு ஹோட்டல் சென்றான். ஹோட்டல் அடைந்தவுடன், சீதாவிடம் ஒரு நாலு மணிக்கு சிங்கப்பூர் சென்று சுற்றி பார்போம் என்றான்.  அவளும் ஓகே சார் என்று சொல்லிவிட்டு தனது அறை சாவியை வாங்கிகொண்டு லிப்டை நோக்கி நடந்தாள்.

இருவரும் மாலை நாலு மணிக்கு டாக்ஸி பிடித்து அர்சிட் ரோடு சென்று ஒவ்வொரு கடைக்கா சென்று பார்வையிட்டனர்.  ராம் எல்லா ஆண்களையும் போல சில வாசனை திரவியங்கள் மற்றும் சில பாக்கெட் சிகரெட் வாங்கினான், சீதா சில மேக்கப் ஆயிட்டங்களுடன் ஒரு கை பை வாங்கினாள்.  இருவரும் புறப்பட்டு ஹோட்டல் வந்து அடைத்தனர்.  வந்தவுடன் ராம் சீதாவிடம் இரவு சாப்பிட இருவரும் மேலே உள்ள திறந்தவெளி  ரெஸ்டாரன்ட் செல்வோம் என்று சொன்னான். அவளும் ஓகே சார், ஒரு எட்டு மணிக்கு உங்க அறைக்கு வந்து விடுகிறேன் என்றாள்.

இரவுஎட்டுமணிக்குசீதாராம்அறைகதவைதட்டினாள், ராமும்தயாராஇருந்தான்.  இருவரும்ஒன்றாகசேர்த்துமேல்தளத்தைஅடைந்தனர். அங்கேஇருந்துபார்க்கும்போதுசிங்கப்பூர்அழகுஅருமையாகதெரிந்தது, இருவரும்சிலநிமிடங்கள்நின்றுரசித்துபார்த்தனர். பிறகுஇருவரும்சாப்பிட அமர்ந்தனர்.

முதலில்  மெனு கார்டை வாங்கி  பார்த்து விட்டு ஒரு லார்ஜ் ஜானி வால்கர் ஆர்டர் செய்தான், அவளுக்கு என்ன ஜூஸ் வேண்டும் என்று கேட்டான், அவள் அதற்கு ஆரஞ்சு என்றாள்.  இரண்டையும் ஆர்டர் செய்து விட்டு, பின்பு மறுபடியும் மெனு கார்டை பார்த்து சாப்பிட பட்டர் நான், சிக்கன் குருமாவும், ஒரு பிரியாணியும் ஆர்டர் செய்தான்.  சர்வீஸ் பாய் முதலில் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் ஜானி வால்கர் கொண்டு வந்து பரிமாறினான். இருவரும் எடுத்து cheers செய்தனர்.

சீதா முதலில் இன்று உங்கள் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது சார், என சொன்னாள்; பதிலுக்கு ராம் ரொம்ப நன்றி, நீ செய்த பிரசெண்டேசன் மிகவும் நல்லா இருந்தது, அதனால் தான் நமக்கு இந்த ஆர்டர் கிடைத்துள்ளது என சொன்னான்.

சில சிப்கள் ஜானி வால்கர் குடித்துவிட்டு; ஏன் இன்னும் நீ கல்யாணம் செய்யவில்லை என்று சீதாவிடம் கேட்டான்.

சீதா மற்ற பெண்களை போல சிரித்தோ, கால்களால் கீழே சுரண்டி வெட்கப்பட்டோ பதில் சொல்லாமல் நேரடியாகவே சொன்னாள் அதை பற்றி நினைத்தே  ரொம்ப வருஷம் ஆகுது.  எப்ப கண் கருவிழிகளுக்கு மை தடவாமல் தலைக்கு தடவ ஆரம்பிச்சேனோ, அப்பவே மறந்திட்டேன்.  அப்படியே இப்ப வயதும் 35 ஆயிருச்சி என சொன்னாள்.

எதுவும் மனசை பாதிக்கிற  மாதிரி கேட்டு இருந்தால் சாரி என்று சொல்லிக்கொண்டே  ஒரு மல்போரோ சிகரெட் எடுத்து பற்ற வைத்தான்.

அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல சார். இதுமாதிரி நிறைய பேர் கேட்டுவிட்டனர், என்று சொல்லி நிறுத்தினாள்.  இவன் உடனே சர்வீஸ் பாய்யை அழைத்து மற்றுமோர் ஜானி வால்கர் ஆர்டர் செய்தான், சீதா முதல் முறையாக அவள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை சொல்ல ஆரம்பித்தாள்.  எங்க அப்பா இருக்கும் வரை எனக்கு அலைந்து திரிந்து வரன் பார்த்தார். அவரும் போய் சேர்ந்து இப்ப 5 வருடம் ஆச்சி.  எல்லோரையும் போல எனக்கும் எங்க அப்பா 25 வயதில் இருந்து வரன் பார்க்க ஆரம்பித்தார், ஒரு 28 வயதில் எனக்கு ஒரு கல்யாணம் முடிவாகி, கல்யாணத்திற்கு முதல் நாள் நின்று விட்டது.

சர்வீஸ் பாய் ஜானி வால்கர் கொண்டு வந்து வைத்தான், உடனே அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தான்; ஒரு பாதி குடித்து விட்டு ஏன் கல்யாணம் நின்று விட்டது என்று கேட்டான்.

சீதா அதற்கு நான் அப்பொழுது ஒரு  பன்னாட்டு ஒரு நிறுவனத்தில் உதவியாளரா வேலை பார்த்து கொண்டு இருந்தேன்.   இப்ப மாதிரியே அப்பவும் அடிக்கடி உயர் அதிகாரிகளுடன் வெளியூர் செல்வேன், அதை அவர்கள் தப்பாக நினைத்து விட்டு கல்யாணத்தை நிறுத்தி விட்டனர்.

சர்வீஸ் பாய் சாப்பாடு கொண்டு வந்து வைத்தான், அவனிடம் மற்று மோர் ரவுண்டு ஜானி வால்கர் ஆர்டர் செய்தான். எந்த வருடம் நடந்தது என கேட்டான், அவள் அதற்கு சிரித்து கொண்டே 2002 என சொல்லி கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.  ராம் சர்வீஸ் பாய் கொண்டு வந்த ஜானி வால்கரை கையில் எடுத்து கொண்டு எந்த மாதம் என்று கேட்டான், அவள் கையில் பட்டர் நானை பிய்த்து கொண்டு அதற்கு கார்த்திகை மாதம் என்றாள்.  உடனே வேகமாக ஜானி வால்கரை கையால் எடுத்து மட மட குடித்தான், குடித்து விட்டு ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்தான்.

அவள் சாப்பிட்டுக்கொண்டே சார் நீங்க சாப்பிடவில்லையா என்று கேட்டாள், இல்ல பசி இல்லை என்று மட்டும் சொன்னான்.

அவள் மறுபடியும் உங்களுக்கு காதல் தோல்வியா சார், இன்னும் கல்யாணம் ஆகாமல் இருக்குது என்று கேட்டாள்.  அந்த கேள்வியை கேட்டவுடன் அவள் கண்ணை உற்று பார்த்துவிட்டு ஒரு புன்முறுவல் செய்தான், அதை பற்றி நாளைக்கு சொல்கிறேன் என்று சொல்லி விட்டு சர்வீஸ் பாய்யை அழைத்து பில் கேட்டான், பில்லை பைசல் செய்து விட்டு இருவரும் லிப்ட்ல் இறங்கி அவர்களது அறைகளுக்கு சென்றனர்.

அறைக்கு சென்றவுடன் தொலைபேசியில் சர்வீஸ் பாய்யை அழைத்து  3 லார்ஜ் பெக் ஜானி வால்கர் ஆர்டர் செய்தான், ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்து புருவத்தை சுருக்கி யோசித்தான்.

ஒரு 10 வருடம் முன்பு தனக்கு நிச்சயம் செய்த பெண் உருவத்தை யோசித்தான். அவன்  கண் முன்னே சீதா தான் மறுபடியும் மறுபடியும் வந்தாள்.  உடனே சர்வீஸ் பாய் கொண்டு வந்த ஜானி வால்கரை எடுத்து மட மட குடித்தான்.

அப்ப இவன் இதுமாதிரியே அடிக்கடி வெளியூர் செல்வான், சில நேரம் உடன் வேலை பார்க்கும் பெண்களுடன் கூட செல்வான். அப்போது இவனுடன் சென்ற ஒரு பெண் இவனுடன் தவறாக நடக்க முயன்றாள்.  இவனும் பெயர்க்கு ஏற்ற மாதிரி இரண்டு நாள் பட்டும் படாமல் விலகி சென்றான், இறுதியில்  என்ன செய்வான், இவனும் மனிதன் தானே; கடவுள் ராமன் இல்லையே  என்ன செய்ய? அவள் விரித்த வலையில் விழுந்தான். அவளுடன் அடிக்கடி வெளியூர் செல்ல ஏற்பாடு செய்தான், இருவரும் வரம்பு எல்லை மீறினர்.  அவன் மூலம் அவள் தனக்கு பதவி உயர்வும் பெற்றாள், பதவி உயர்வு பெற்றவுடன் மற்றுமோர் அதிகாரியுடன் நெருங்கி பழகி அமெரிக்கா சென்று தனது முன்னால்  காதலனை திருமணம் செய்து வாழ ஆரம்பித்தாள்.  இந்த விஷயம் இவனை மிகவும் பாதித்தது,  அதனால்  தான் இந்த சீதாவை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி கல்யாணத்தை நிறுத்தியது இவனுக்கு உரைத்தது.

இதை நினைத்து நினைத்து வேகமாக குடித்து விட்டு கட்டிலில் படுத்தான், மறுநாள் காலையில் 10 மணிக்கு தான் எழுந்தான்.  எழுந்து தொலைபேசியை பார்த்தான், பல மிஸ்டு கால் சீதாவிடம் இருந்து வந்து இருந்தது. இந்த கற்புக்கரசியை சந்தேக பட்டு அவள் வாழ்க்கையை  அழித்தது மட்டும் இல்லாமல் நாமும் வாழ்க்கையை தவற விட்டு விட்டோம் என்று நினைத்து ஒரு சிகரெட் எடுத்து புகைத்து விட்டு, குளித்து முடித்து விட்டு, சீதாவிற்கு போன் செய்தான்.  சீதா நான் ரெடி, கிளம்பி கீழே வா என்று சொன்னான், அதற்கு அவள் ஓகே சார் என சொன்னாள்.

இருவரும் சேர்ந்து சிங்கப்பூர் முழுவதும் சுற்றினர், மதியம் சாப்பிட்டுவிட்டு சில அலுவலகம் சென்று இவர்கள் வந்த வேலைகளையும் செய்தனர்.

இரவு அறைக்கு திரும்பி வரும் போது சீதா சார் நீங்க நேற்று  சொன்னது போல உங்கள் கதையை எனக்கு சொல்ல வேண்டும் என சிறு குழந்தையை போல கேட்டாள். இவன் வழக்கம் போல சிரித்து பதில் கூறாமல் நடந்தான்.  இரவு மறுபடியும் திறந்தவெளி உணவகம் சென்று சாப்பிட அமர்ந்தனர்.  சர்வீஸ் பாய்யை அழைத்தவுடன் வழக்கம் போல ஜானி வால்கர் ஆர்டர் செய்தான், அவள் என்ன இவன் பொண்டாட்டியா இவனை கண்டிக்க; எதுவம் கூறாமல் இருந்தாள்.

மெதுவாக முதல் பெக்கை குடித்து முடித்து விட்டு சொன்னான், நான் என்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை தீவரமா காதலித்தேன், ஆனால் அவள் என்னை ஏமாற்றி விட்டு சென்று விட்டாள், அதற்கு பிறகு கல்யாணம் பற்றி யோசிக்காமல் ஒவ்வொரு கம்பெனியாக மாறி மாறி உலகம் முழுவதும் சுற்றி சுற்றியே வயது ஏறிபோச்ச, என்று கூறினான்.  உடனே மற்று மோர் பெக் ஆர்டர் செய்து குடித்தான், அவள் இவன் பெற்றவர்களை பற்றி கேட்டாள், அதற்கு ராம் இருவரும் சில வருடம் முன்பே இறந்து போயிட்டனர்,  இப்போ நினைத்தால் தான் எனக்கு மீதம் உள்ள நாட்களை பற்றி பயமாக உள்ளது என்று கூறினான்.  அதற்கு அவள் பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தாள்.  மறுபடியும் ஒரு பெக் மட மட குடித்து விட்டு ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்து வேகமா இழுத்தான். அதற்குள் அவள் ஆர்டர் செய்த டிபன் வந்தது, உடனே இருவரும் சாப்பிட்டுவிட்டு அவர்களது அறைகளுக்கு சென்றனர்.

சீதா அவள் அறைக்கு சென்றவுடன், ராம் இன்று நடந்து கொண்ட விதத்தை பற்றி நினைத்தாள், அவளும் இதுவரை எத்தனையோ உயர் அதிகாரிகளுடன் வெளியூர் சென்று இருக்கிறாள், அதில் பெரும்பாலோர் இவளிடம் காமஉணர்வை தூண்டுவது போலவும், பேருந்து மற்றும் விமானத்தில் செல்லும் போது தெரியாமல் செய்வது போல தெரிந்தே இவளது உடம்பை உரசியும், உரசாமல் சில நேரம் பார்வையாலும் தொல்லை தருவதை பற்றி எண்ணினாள்,

இதை பற்றி யோசித்து யோசித்து தூக்கம் வராமல் எழுந்து ஜன்னல் வழியே வானத்தை பார்த்தாள், மறு நாள் பௌர்ணமி என்பதால் நிலா பிரகாசமா தெரிந்தது, நிலவை சில நேரம் ரசித்து விட்டு திரும்ப வந்து படுக்கும் போது மறுபடியும் ராம் பற்றிய சிந்தனை மேலோங்கியது.

நம்ம கூட அடிக்கடி ரயிலில் செல்லும் போது, ஏன் இப்ப கூட விமானத்தில் வரும் போது, சிங்கப்பூர் முழுவதும் சுற்றும் போதும் கூட அவர் விரல் கூட நம் மீது படவில்லை. தினமும் நம் முன்னே அமர்ந்து தான் குடிக்கிறார், அவரை நம்மகிட்ட நல்லவரா காட்ட கூட முயற்சி செய்வது இல்லை; நம்மிடம் ஒரு தப்பான நோக்கத்தில் அலுவலகத்தில் கூட பேசுவது, நடப்பது  கிடையாது என நினைக்கும் போதே இவள் எதிரில் அமர்ந்து வேலை பார்க்கும் காமக்கொடூரன் ரமேஷ் தான் நினைவுக்கு வந்தான்.  இவளது பெயர்க்கு இராவணன் போல பலரும் கரை ஏற்படுத்த முயன்றுள்ளனர். இவளும் எதற்கும் இடம் தராமல் தனது பெயரை காப்பாற்றினாள்.  இதனால் அடிக்கடி வேலை மாறி கொண்டே இருந்தாள். அதானல் ராம் ஏதோ நம்மிடம் சொல்ல வருகிறார் என மட்டும் முடிவு செய்தாள்.

மறுநாள் இருவரும் காலையில் வெளியில் சென்று அலுவலக வேலையை முடித்து விட்டு சிங்கப்பூர் மாரியம்மன் கோவிலுக்கு இருவரும் சென்றனர், போகும் போது அருகில் இருந்த கடையில் மல்லிகை பூ வாங்கினான் சாமிக்கு, மறுபடியும் சில முலம் பூ கேட்டு வாங்கி சீதாவிடம் தந்தான். சீதா வாங்காமல் யோசித்தாள், கோயிலுக்கு போறோம், தலையில் வைத்துகொள் என்று சொன்னான், சரி சார் என்று சொல்லிவிட்டு  வாங்கிகொண்டாள். இருவரும் கோவிலுக்கு சென்று  சாமிதரிசனம் செய்து விட்டு ஹோட்டல் அறைக்கு திரும்ப வந்தனர்.  வழக்கம் போல மேல உள்ள திறந்தவெளி உணவகத்திற்கு சென்று அமர்ந்தனர்.

ராம் வழக்கம் போல ஜானி வால்கர் ஆர்டர் செய்யாமல் சாப்பாடு மட்டும் ஆர்டர் செய்தான்.  இருவரும் சாப்பிட்டு விட்டு ஐஸ்கிரீம் ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு மெதுவாக நடந்து சென்று மின்னொளியில் சிங்கப்பூரின் அழகையும், முழு நிலவின் பிரகாசத்தையும் ரசித்தனர்.  இருவரும் யார் முதலில் பேசுவது எப்படி பேசுவது என்று தெரியாமல் முதல் தடவையாக சந்திக்கும் காதலர்  போல பேசாமல் இருந்தனர்.

இறுதியாக இந்த விளையாட்டுக்கு சீதா ஒரு முற்று புள்ளி வைத்தாள், ஏன் இன்று நீங்க ஜானி வால்கர் ஆர்டர் செய்து குடிக்க வில்லை என்று கேட்டாள்.  இந்த கேள்வி கேட்டவுடன் சிறிது நேரம் சத்தம் வர சிரித்தான், சிரித்து முடித்துவிட்டு நான் இப்ப  உன்னிடம் ஒன்று  சொல்ல போகிறேன்.  பயப்படாமல் கேள் என்றான்.

ஒரு சிறு குழந்தை தனது பாட்டியிடம்   கதை கேட்பதை போல மிகவும் ஆவலானாள்.  சீதா மனதிற்குள் பல்வேறு கற்பனை கனவுகள் ஓடியது.  அதற்குள் ராம் நாளைக்கு சென்னை சென்றவுடன் நான் எனது வேலையை ராஜினாமா செய்ய போகிறேன் என்று மிகவும் அசால்டாக சொன்னான்,  அவள் இந்த பதிலை எதிர்பாரக்கவில்லை.   அவள் அதற்கு பதறி போய் ஏன் சார் என்று கேட்டாள்.

ஏற்கனவே எனக்கு மும்பையில் ஒரு கம்பெனியில் வேலை கிடைத்து உள்ளது, நான் இதுவரை ஏற்காமல் இருந்தேன், இப்ப தான் நான் அங்கு செல்ல முடிவு செய்துள்ளேன் என்று சொல்லிவிட்டு கம்பெனி பெயரையும் சொன்னான். சொன்னவுடன் ராம் கை பிடித்து குலுக்கி வாழ்த்துக்கள்  தெரிவித்துவிட்டு ஓகே சார் வேற என்ன ஒரு மாதிரி கேட்டாள். அவன் பதில் எதுவும் கூறாமல் இருந்தான், அவளே உங்க கூட  இருந்த இந்த மூன்று நாள் மிகவும் மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் இருந்தது சார்.  ரொம்ப நன்றி சார் என்று சொன்னாள்.

அவன் கன்னத்தில் மறுபடியும் மறுபடியும் யாரோ அறைவது போலவும் சீதைக்கு பதில் இவன் தீ குளிப்பது போலவும் இருந்தது.

இருவரும் லிப்ட்ல் ஏறி தங்களது அறை நோக்கி சென்றனர்.  சீதா அவள் அறையை திறக்கும் போது, நீயும் ஒரு மாதத்தில் வேலையை ராஜினாமா செய்து விடு சீதா என்று சத்தமாக சொன்னான் ராம்.  இதை கேட்டவுடன் சீதா கதவை திறக்காமல் ராம் அறையை நோக்கி நடந்து வந்து;  பிறகு நானும் எங்க அம்மாவும் எப்படி சாப்பிட என்று கேட்டாள்.

நீயும் மும்பை வந்து என்னுடன் வாழ்; உங்க அம்மாவையும் கூட்டி கொண்டுவா என கூறி விட்டு அவனது அறை கதவை திறந்தான், சீதாவிற்காக இவனது மன கதவையும் சேர்த்து.

சீதா நான் உன்னை கல்யாணம்  செய்து கொள்ள முடிவு செய்துவிட்டேன், அதற்கு நாம் இருவரும் வேலை பார்க்கும் அலுவலகம் ஒரு தடையாக இருக்கலாம், அதற்காக தான் நான் முதலில் ராஜினாமா செய்கிறேன், நீ ஒரு மாதம் கழித்து  ராஜினாமா செய்து விட்டு மும்பை வந்து விடு, நாம் இருவரும் மும்பையில்  இருந்து நமது புது வாழ்க்கையை    ஆரம்பிக்கலாம் என கூறினான்.

நா. முத்துக்குமார் வரிகளை போல தான்  வாழ்க்கையும்தண்டவாளம் பிரிந்து செல்வது தூரம் சென்று சேரத்தான்

 

 

 

Share This Book