முதலில் தொடுவானத்தை (எனது முதல் புத்தகம்) தொட்டவர்களுக்கு நன்றி.

நீங்களும் நானும்  என்றோ  அணுகிய / கேட்ட  ஒரு அணு துகளின் பிம்பங்களின் பிணைவு தான் இந்த சரோஜா பாட்டி கதைகள்.    வாழ்வின் யதார்த்தத்தை சிறுகதை என்னும் ஒரு மாய போர்வை வடிவில் இதில் தர முயற்சி செய்துள்ளேன்.  சமூக வாழ்வை புரிந்துகொள்வது அறிவியலுக்கு அப்பாற்பட்டதுதான். இந்த சரோஜா பாட்டி கதைகள் உங்கள் இலக்கிய பசியை போக்காவிட்டாலும், உங்கள் பசியை போக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம்.   இந்த சரோஜா பாட்டி கதைகள் மூலமாக சில விதைகளை தூவியுள்ளேன், இது மின்னூல் மூலமாக காற்றில் பரவி வாசிக்கும் உங்களிடம் நல்ல அறங்களை  ஏற்படுத்தும் என நினைக்கிறேன்.

என்னை போல இருப்பவர்களுக்கு எழுதவும் அதை மின்னூல் போல ஆக்கும் www.freetamilebooks.com  வலை தளத்திற்கும், அதில் பணிபுரியும் அனைவருக்கும் நன்றி.   இந்த புத்தகத்தில் உள்ள எழுத்து பிழை மற்றும் சொற்பிழைகளை களைய உதவி புரிந்த நண்பர்களுக்கு நன்றி.

 

உங்கள் விமர்சனங்களுக்காக காத்திருக்கும்.

 

சங்கர் ஜெயகணேஷ்

sjayaganesh@gmail.com


 

Share This Book